தென்காசியில் அரசு தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தென்காசியில் அரசு தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

வழிகாட்டுதல் நிகழ்ச்சி 

அரசு தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி-கடையம் சாலை அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன்கோவிலில், ஆன்மீகத்தோடு பல்வேறு அறப்பணிகள், கல்வியறிவு மற்றும் உடல்திறனை மேம் படுத்தும் விதமாகவும், நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாரம்பரிய கலையான சிலம்பு , யோகாசனம் போன்ற கலை களை மீட்டெடுப்பதற்காகவும், கிராமப்புற மாணவ மாணவி களுக்கு பல்வேறு சிறப்பு பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக துளிர் ஐஏஎஸ் அகாடமி உடன் இணைந்து அரசு தேர்வுகளுக் கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குரூப்-1, குரூப்-2, காவல் மற்றும் தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கிராமப்புற மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக துளிர் ஐஏஎஸ் அகாடமியை சேர்ந்த இயக்குனர் மாரிமுத்து, துணை இயக்குனர் முரளி அண்ணா துரை, இணை இயக்குனர் காளிதாஸ், ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை கள் வழங்கி பேசினர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் ஆதிநாராயணன் செய்திருந்தார்.

Tags

Next Story