குணசீலம் காவிரி ஆற்றில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குணசீலம் காவிரி ஆற்றில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

காவல் நிலையம் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே குணசீத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாப்பா காலனியைச் சேர்ந்தவர் 47 வயதான சதீஷ்குமார் இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது மனைவியுடன் விகாரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி மாலை 5 மணி அளவில் குணசீலத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

இவருக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. அப்போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தார்.இச்சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இத்திற்க்கு விரைந்து சென்ற உடலைப் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story