குண்டு மல்லி கிலோ ரூ.1, 200க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

குண்டு மல்லி கிலோ ரூ.1, 200க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

குண்டு மல்லி 

முகூர்த்த தினத்தையொட்டி கடந்த வாரங்களில் ரூ.400க்கு விற்ற குண்டு மல்லி தற்போது ரூ.1,200க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியை சுற்றியுள்ள அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, நவலடிப்பட்டி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் குண்டு மல்லி பூ பயிரிட்டுள்ளனர். கொல்லிமலை அடிவாரப்பகுதி பூக்களில் வாசனை அதிகம் உள்ளதால் மக்கள் விரும்பி வாங்கி செல்வர். பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து குறைந்த நிலையில், தற்போது வெயில் அதிகரித்துள்ளதால் பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 3 வாரங்களாக கிலோ, 400 ரூபாய் வரை விற்ற மல்லிகை பூ, முகூர்த்த தினத்தையொட்டி கிலோ, 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story