ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு

ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு
வீட்டில் துப்பாக்கி குண்டு
ஐகோர்ட் வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு - போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, மேற்கு தாம்பரம், மாந்தோப்பு, மீனாம்பாள் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன், 60; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர். நேற்று மாலை, தியாகராஜன் வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டின் உட்புற கண்ணாடி திடீரென உடைத்து நொறுங்கியது. வீட்டில் இருந்த தியாகராஜனின் மனைவி பிரியா, மகன் விஷால் அதிர்ச்சியடைந்தனர். கண்ணாடி உடைந்த இடத்தை பார்த்தபோது, அங்கு துப்பாக்கி குண்டு இருந்தது. இதுகுறித்து உடனடியாக, தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களுடன் சென்ற போலீசார், துப்பாக்கி குண்டை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி குண்டு 1 கி. மீ. , துாரத்தில் இருந்து வந்திருக்கலாம் எனவும், யாராவது தவறுதலாக துப்பாக்கியால் சுட்டனரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் தலைமையிலான போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story