கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்!

கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டாஸ்!

பைல் படம்

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 19.04.2024 அன்று தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு, பொட்டல்காடு ஜங்ஷன் பகுதியில் ஒரு டீக்கடையில் வைத்து முள்ளக்காடு பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் மகன் பிரேம்குமார் (19) என்பவரையும், டீக்கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம் மகன் வேல்ராஜ் (45) என்பவரையும் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஹரிசிங் (23), முருகன் மகன் சக்திவேல் (24) மற்றும் ஆறுமுகம் மகன் ரமேஷ் ரேவிந்த் (24) ஆகிய மூவரையும் முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹரிசிங், சக்திவேல் மற்றும் ரமேஷ் ரேவிந்த் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags

Next Story