27 பேருக்கு குண்டாஸ்

27 பேருக்கு குண்டாஸ்

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2023ல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2023ல் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், மது விற்பனை, பாலியல் வன்கொடுமை வழக்கு, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 2023ஆம் ஆண்டு மட்டும் 27பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு முழுவதும் 52 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் போடப்பட்ட நிலையில் 2023ல் 27 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story