கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்

கொலை முயற்சி வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ்

செய்துங்கநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் புதிய பாலம் அருகே கடந்த 24.05.2024 அன்று ஒருவரிடம் தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கண்ணன் (எ) கந்தசாமி (25) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் இன்னோஸ்குமார் சம்மந்தப்பட்ட அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

Tags

Next Story