கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டாஸ்

திண்டுக்கல் கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட கலெக்டர் பூங்கொடிக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பரிந்துரை செய்தார்.
திண்டுக்கல் கொலை வழக்கில் ஈடுபட்ட மூன்று பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. திண்டுக்கல் ஓய்.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 25).கூலித் தொழிலாளி.இவரை கடந்த பிப்ரவரி 3ந் தேதி மர்ம கும்பல் பொன்மாந்துறை அருகே நல்லேந்திரபுரம் பகுதியில் சரமாரியாக அரிவாளால் வெட்டி, தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்ற குருவி சரவணன் 38),பொன்மாந்துறையைச் சேர்ந்த காடு என்ற அன்பழகன் (24), நல்லேந்திரபுரத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (21)17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பேரில் அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

Tags

Next Story