மானூர் குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

மானூர் குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

குண்டாஸ்

திருநெல்வேலி மாவட்டம்,மானூரை சேர்ந்த குற்றவாளி மீது குண்டாஸ் வழக்குபதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட மானூரை சேர்ந்த மகாராஜன் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ளார். இவர் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் வேண்டுகோளுக்கிணங்க எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மகாராஜன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

Tags

Next Story