ஒரே நாளில் இரு தரப்பு குரு பூஜை – காவல்துறையினர் குவிப்பு

ஒரே நாளில் இரு தரப்பு குரு பூஜை – காவல்துறையினர் குவிப்பு

குருபூஜை

எஸ்.பாரைப்பட்டி சங்கரானந்த சுவாமிகள் மடம் சிவன் கோயில் குரு பூஜை இரு பிரிவினரால் ஒரே நாளில் நடைபெறுவதால் பதற்றம் அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

சிங்காரக்கோட்டை எஸ்.பாரைப்பட்டி சங்கரானந்த சுவாமிகள் மடம் சிவன் கோயில் குரு பூஜை 150 மீட்டர் தொலைவில் இரு பிரிவாக நடத்துவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிங்காரக்கோட்டை எஸ்.பாரைப்பட்டியில் சங்கரானந்த சுவாமிகள் மடம் உள்ளது.இதனால் இங்கு ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜைக்கு பிரச்னை ஏற்படுவதும், போலீசார் பேச்சுவார்த்தை நடத்துவதுமாக உள்ளது.

2022ல் நீதிமன்ற உத்தரவுபடி அறக்கட்டளை தரப்பு முதல் நாளும், 2ம் நாளில் ஊர்மக்களும் குரு பூஜையை தனித்தனியே நடத்தினர்.இந்நிலையில் குரு பூஜை நட்சத்திர நாளை அடிப்படையாக கொண்டு நடப்பதால் வேறுநாளில் நடத்த இரு தரப்பும் சம்மதிக்கவில்லை. குரு பூஜைகளை இரு தரப்பினர் நடத்துவதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story