சோழீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

சோழீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

சிறப்பு பூஜை

மல்லசமுத்திரத்தில் உள்ள பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி, தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
மல்லசமுத்திரத்தில் சோழர் காலத்தில் கட்பட்ட பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை சோழீஸ்வரர் கோவிலில் நேற்றுமுன்தினம் குருபெயர்ச்சி மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மாலை 4;30க்கு, நடராஜர் அபிசேகமும், 5;30க்கு, குருபெயர்ச்சி சிறப்பு அபிசேகமும், 6;30க்கு, தேய்பிறை அஷ்டமி பூஜையும் நடந்தது. பக்தர்கள் பால், தயிர், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம், கரும்புசாறு, தேங்காய்பழம், மாலை, நவகிரக வஸ்த்ரம், மஞ்சள் மற்றும் சிகப்பு துண்டு உள்ளிட்டவற்றை கோவிலில் சமர்பித்து, தங்களுக்குண்டான பரிகாரங்களை செய்து கொண்டனர்.

Tags

Next Story