குட்கா பதுக்கியவர் கைது - 501 கிலோ பறிமுதல்

குட்கா பதுக்கியவர் கைது - 501 கிலோ பறிமுதல்

கைது 

சேலம் லீ பஜார் பகுதியில் உள்ள ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளப்பட்டி போலீசார் நேற்று இரவு லீ பஜார் சுடுகாடு பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை நடத்தினர். அங்கு குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து 501 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, குடோன் மேலாளர் ராஜா (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பெங்களூருவை சேர்ந்த 2 பேரை தேடி வருகின்றனர்.



Tags

Next Story