குட்கா பதுக்கல் - 18 கடைகளுக்கு சீல்

குட்கா பதுக்கல் - 18 கடைகளுக்கு சீல்

பைல் படம் 

திண்டுக்கல், பகுதியில் புகையிலை பதுக்கிய 18 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் புகையிலை விற்பனை அதிகளவில் நடப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புகையிலை பதுக்கியதாக 18 கடைகளுக்கு சீல் வைத்து 33 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story