குட்கா வைத்திருந்தவர் கைது - 300 கிலோ பறிமுதல்

குட்கா வைத்திருந்தவர் கைது - 300 கிலோ பறிமுதல்

பைல் படம்

அவிநாசி அருகே விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 300 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அவிநாசி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவிநாசி போலீசார் அவிநாசி அடுத்த சென்னிமலைகவுண்டம்புதூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்றிருந்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த இக்பால் (வயது 41) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கு இருப்பது தெரியவந்தது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தர்வேஸ் மற்றும் ஜெயிலாபுதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story