விராலிமலையில் குட்கா விற்பனை - கடைகளுக்கு சீல்

விராலிமலையில் குட்கா விற்பனை - கடைகளுக்கு சீல்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 

விராலிமலையில் குட்கா விற்பனை செய்த மளிகை மற்றும் பெட்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாது காப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. அதன்பேரில் விராலிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் தலைமையிலான அலுவலர்கள் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது விரா லிமலை - கீரனூர் சாலையில் ஆம்பூர்பட்டி நால்ரோட்டில் சுரேஷ் (33) என்பவர் நடத்தி வரும் மளிகை கடையிலும், விராலிமலை அருகே பாஸ்கர் (41) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையிலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள், 2 கடைக்கும். சீல் வைத்தனர்.

Tags

Next Story