பள்ளிகொண்டா அருகே காரில் கடத்திவரப்பட்ட குட்கா பறிமுதல்

பள்ளிகொண்டா அருகே காரில் கடத்திவரப்பட்ட குட்கா பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா

பள்ளிகொண்டா அருகே சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 180 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் பள்ளிகொண்டா போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி உள்ளே சோதனை செய்தபோது 15 பிளாஸ்டிக் மூட்டைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த தப்பிக்க முயன்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து விசாரணை அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜோகாராம் (25) என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் பெங்களூரில் சொகுசு காரின் மூலம் சென்னைக்கு விற்பனைக்காக குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,

இது தொடர்பாக பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோகாராமை கைது செய்தனர்.மேலும் சொகுசு காரில் கடத்தி வந்த ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள 180 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story