குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

செல்வமாரியப்பன்

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து, ரூ.1.57 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி சுபாநகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் சோதனை மேற்கொண்ட போது அங்கு கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராம் மகன் செல்வமாரியப்பன் (43) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் செல்வ மாரியப்பனை கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 1,57,990/- மதிப்புள்ள 152 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story