பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது - 102 கிலோ பறிமுதல்

பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது - 102 கிலோ பறிமுதல்

பைல் படம் 

தஞ்சாவூரில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்றவரை கைது செய்து 102 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் கொடிமரத்து மூலை அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தஞ்சை கிழக்கு காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (47) என்பதும் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருவதும் இவரது கடையில் விற்பனைக்காக 102 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story