மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்றவர் கைது

கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ்

மரக்காணத்தில் மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 75 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட சால்ட் ரோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஆனந்தராஜ் வயது (30).இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த ராஜன் மளிகை கடை மற்றும் வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது அவரது வீட்டில் 75 கிலோ எடையுள்ள ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் 5 மூட்டைகளில் இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த போலீசார் ஆனந்தராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அவர் தனது மளிகை கடை மற்றும் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு குட்கா பொருள் விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். அவர் மீது மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுபோல் தடை செய்யப்பட்ட பான் பொருட்கள் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது. இதில் யார் யார் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story