குட்கா விற்பனை - இளைஞர் கைது, வாகனம் பறிமுதல்

குட்கா விற்பனை - இளைஞர் கைது, வாகனம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட குட்காவுடன் கைது செய்யப்பட்டவர் 

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மோட்டாா் சைக்கிளில் கடத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகா் காவல் ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா், ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனா். அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டிவந்த, ஆரோக்கியபுரம் பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் என்பவரின் மகன் இசக்கிராஜாவை (32) கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ. 9 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Tags

Next Story