சேலம் அருகே குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

சேலம் அருகே குட்கா விற்ற கடைகளுக்கு சீல்

கடைகளுக்கு சீல் 

பனமரத்துப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
சேலத்தை அடுத்துள்ள பனமரத்துப்பட்டி பகுதியில் போதை புகையிலை பொருட்களான குட்கா விற்பனையை தடுக்க போலீசாரும், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களும் சோதனை நடத்தினர். இதில், பனமரத்துப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள ரஷித்கான் (40) என்பவர், தனது மளிகைக்கடையில் போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்ததை கண்டறிந்து, அதனை பறிமுதல் செய்தனர். இதே போல், பனமரத்துப்பட்டி காந்திநகர் பகுதியில் சிவாஜி (50) என்பவரது மளிகைக்கடையிலும் போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 கடைக்காரர்கள் மீதும் பனமரத்துப்பட்டி போலீசில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த கடைகளுக்கு சீல் வைக்க மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். இதன்பேரில் சிவாஜி, ரஷித்கான் ஆகியோரது கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா, போலீஸ் எஸ்ஐ தங்கவேல் ஆகியோர் சீல் வைத்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story