21 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

21 கிலோ குட்கா பதுக்கியவர் கைது

கைது

திருவள்ளூர் மாவட்டம், களாம்பாக்கம் பகுதியில் குட்கா பதுக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 48. அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று அவரது விவசாய நிலத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்கு தகவல் கிடைத்தது. சோதனை செய்ததில் பதுக்கி வைத்து இருந்த ஹான்ஸ் போதைப்பாக்கு உள்ளிட்ட 21 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மதிப்பு 40,000 ரூபாய். அவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். l திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி பையுடன் நடந்து வந்தவரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். பையில் 3 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அருள், 49 என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Tags

Next Story