37 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

37 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

கைது

திருத்தணி அருகே மோட்டாா் பைக்கில் கடத்தப்பட்ட 37 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் திருத்தணி வழியாக ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் மாவட்டத்துக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருத்தணி எஸ்.ஐ.,ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் புதன்கிழமை திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தி சோதனை செய்ததில், வாகனத்தில் இருந்த பைகளில், 37 கிலோ குட்கா பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

மேலும், விசாரணையில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தவா் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூா் பெரியாா் நகா் சோ்ந்த காசி மகன் நீலகண்டன்(39) என தெரிய வந்தது. தொடா்ந்து திருத்தணி போலீஸாா் நீலகண்டனை கைது செய்தனா்.

Tags

Next Story