ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா

ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா 

தி.மலை மாவட்டம், வந்தவாசியில், வந்தைவட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கம் சார்பில், அருணை எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியாளரும், கவிஞருமான தமிழ்ராசா எழுதிய எங்கே போயின மரவட்டைகள்?என்றஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா தலைவர் ஆசியன் ரகமத்துல்லா தலைமையில் இன்று நடைபெறுகிறது. சங்க செயலாளர் எம். பி.வெங்கிடேசன் அனை வரையும் வரவேற்கிறார். சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் நூலை வெளியிட்டு பேச, மேனாள் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் எஸ். குமார் பெற்றுக்கொள்கிறார்.சாகித்திய அகடாமியின் பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ்,தொழிலதிபரும், கவிஞருமான அ.ஜ.இஷாக்,லயன் சங்க மாவட்ட தலைவர் இரா.சரவணன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.நூலாசிரியர் கவிஞர் தமிழ்ராசா ஏற்புரை வழங்குகிறார்.

Tags

Next Story