சிவகங்கையில் ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி !

சிவகங்கையில் ஆலங்கட்டி மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி !

ஆலங்கட்டி மழை

சிவகங்கையில் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சிவகங்கை நகர் பகுதிகளில் மழைநீர் சாலையில் ஆர்ப்பரித்து ஓடியது. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. வீடுகளில் விழுந்த ஆலங்கட்டியினை சிறுவர்கள் உட்பட அனைவரும் கையில் எடுத்து பார்வையிட்டு குதூகலித்தனர். மேலும் ஆலங்கட்டியை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story