அரை நிர்வாணமாக தொழிற்சங்க தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த தொழிற்சங்க தொழிலாளர்கள், சட்டையை கழட்டி அரை நிர்வாணமாக கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கோவை:ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்னா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை சுங்கம் பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் சிஐடியு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பணிமனை முன்பாக தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலர் சட்டையை கழட்டி அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழங்களின் வரவுக்கும் செலவு வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க வேண்டும்,ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பணிமனை முன்பாக சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story