பள்ளிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

பள்ளிபாளையம் அக்ரகாரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம் நடைபெற்றது

குமாரபாளையம் தாலுகா பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பவர் உரிமைகளுக்கான சங்கத்தின் கூட்டமானது நிர்வாகி கனகவல்லி தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் அருண்குமார் ,தாலுகா பொருளாளர் கனகவல்லி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் பள்ளிபாளையம் அக்ரகாரம் பகுதியில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் . கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை உடனடியாக தீர்க்க வேண்டும்.

ஆற்றங்கரை பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மேலும் 30 நபர்களுக்கு உறுப்பினர் பதிவு செய்யப்பட்டு, உறுப்பினர் கார்டு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்

Tags

Next Story