பள்ளிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்

பள்ளிபாளையத்தில் மாற்று திறனாளிகள் சங்க கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் குமாரபாளையம் தாலுக்கா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் பதிவு கூட்டம் வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாலுகா தலைவர் அர்ஜுனன் மற்றும் அருண்குமார்! கனகவள்ளி, சண்முகசுந்தரம், சுப்பிரமணி மற்றும் பாக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர். 38 மாற்று திறனாளிகளுக்கு உறுப்பினர் பதிவு செய்யப்பட்டது . கூட்டத்தில் தீர்மானங்களாக உறுப்பினர் பதிவை ஜூலை 30 தேதிக்குள் முடித்துக் கொடுப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்திர உதவித்தொகை வழங்க வேண்டி நடைபெற உள்ள போராட்டத்தில், திரளாக கலந்து கொள்வது, 100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வது , உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story