இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு
மனுவை பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் டி.எடையார் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்தி றனாளிகள் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு சொந்தமாக வீடோ, மனையோ எதுவும் இல்லை. வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருவதோடு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட வில்லை. ஆகவே எங்களின் ஏழ்மை நிலையை கருதி இலவச வீட் டுமனைப்பட்டா வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.

Tags

Next Story