மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி - 29ம் தேதி நடைபெற்றது இதில், கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 27 மாற்றுத்திறனாளிகள் கலந்துக் கொண்டனர்.

அதில் மனு கொடுத்த உடன் உடனடியாக 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,800 மதிப்பில் சக்கர நாற்காலியும், 1 மாற்றுத்தினாளிக்கு ரூ.2,780 மதிப்பில் காதொலிகருவியும் வழங்கப்பட்டது. மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அலுவலக பணியாளர்கள் பலர் கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story