கையாடல் புகார் - நீதிமன்ற எழுத்தர் மீது வழக்குப்பதிவு

கையாடல் புகார் -  நீதிமன்ற எழுத்தர் மீது வழக்குப்பதிவு

காவல் நிலையம் 

பெரியகுளம் நீதிமன்றத்தில் அபராத தொகையை கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்த வழக்கில் தலைமை எழுத்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தலைமை எழுத்தாளராக பணியாற்றியவர் ஹேமலதா. இவர் நீதிமன்ற சார்பில் பல்வேறு வழக்குகளில் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூபாய் 25 ஆயிரத்தை பதிவேட்டில் பதிவு செய்யாமல் கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக பிப்ரவரி 1 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற தலைமை எழுத்தாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story