பாடாலூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

பாடாலூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 

ஆஞ்சநேயர் திருக்கோயிலில் "அனுமன் ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் -அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பூமலை சஞ்சீவிராய பெருமாள் வழித்துணை ஆஞ்சநேயர் திருக்கோயில். இக்கோயிலில் கணபதி வழிபாட்டுடன்அனுமன் ஜெயந்தி விழா தொடங்கியது.

தொடர்ந்து தன பூஜை, கலச பூஜை, சுதர்சன ஹோமம் நடைபெற்றது. இதன்னயடுத்து மஹாபூர்ணாஹூதி நடைபெற்றதை தொடர்ந்து, வழித்துணை ஆஞ்சநேயருக்கு திரவியம் மஞ்சள் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பழ வகைகள் , மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது.இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story