ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

அனுமன் ஜெயந்தி 

கள்ளக்குறிச்சி மாவட்டம், ராவத்தநல்லூரில் உள்ள அனுமன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லுார் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வெற்றிலை, துளசி, வடை, பூ, பழம் உள்ளிட்ட வற்றால் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story