அனுமன் ஜெயந்தி விழா - சந்தன காப்பு அலங்காரத்தில் பால ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி விழா - சந்தன காப்பு அலங்காரத்தில் பால ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தி விழா 

சேலம் மாவட்டம் , சங்ககிரி அருகே வெள்ளூற்று பெருமாள் கோயிலில் உள்ள பால ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம் அரிசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட சூரியன் மலை அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வெள்ளூற்று திருக்கோவயில் வளாகத்தின் முன் உள்ள பால ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின்னர் சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பால ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அருள்மிகு ஶ்ரீ பாலா ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர்.

Tags

Next Story