அனுமன் ஜெயந்தி வழிபாடு

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சேந்தமங்கலம் அருகே நைனாமலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அடிவாரத்தில் வீற்றிருக்கும் பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றனர் பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story