அருண் நேருவுக்கு நூதன முறையில் பிறந்தநாள் வாழ்த்து

அருண் நேருவுக்கு நூதன முறையில் பிறந்தநாள் வாழ்த்து

சைக்கிளில் நூதன வாழ்த்து 

திருச்சியில் தொழிலதிபர் அருண் நேரு பிறந்த நாளுக்கு திமுக பகுதி செயலாளர் கமால் முஸ்தபா நூதன முறையில் வாழ்த்துக் கூறியது பலரையும் கவர்ந்து ஈர்த்துள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு மகன் தொழிலதிபர் அருண் நேரு தனது பிறந்த நாளை டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடுகிறார்.இதை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்டத்தில் திமுக சார்பில் அன்னதானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவி வழங்கல், ரத்த தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் திமுக நிர்வாகிகள் பலரும் அருண் நேரு பிறந்தநாளுக்கு பேனர், போஸ்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிளக்ஸ், பேனர் போன்றவை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த வகையில் திருச்சி திமுக அண்ணா நகர் பகுதி செயலாளரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான கமால் முஸ்தபா நூதன முறையில் அருண் நேருவுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து பதாகைகளை சைக்கிளில் பொருத்தி அதை நகரின் முக்கிய வீதிகளில் வலம் வரச் செய்துள்ளார்.

திமுக நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளிலும் வாழ்த்துப்பதாகைகளுடன் கூடிய சைக்கிள்களை நிறுத்தி நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரவு நேரத்திலும் ஜொலிக்கும் வகையில் இந்த வாழ்த்து பதாகைகளை அவர் வடிவமைத்துள்ளார். கடந்த ஒரு வார காலமாக இத்தகைய நூதன முறையில் கமால் முஸ்தபா தொழிலதிபர் அருண் நேருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார். இவரது இந்த நூதன வகையிலான பிறந்தநாள் வாழ்த்து திமுகவினர் மட்டுமின்றி, பொதுமக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story