ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே கலப்பு திருமணம் செய்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கோணப்பட்டி கிராமத்தைச் சோந்த வினோத்பாண்டியன், வெங்கட்ராமன், சந்தோஷ்குமாா் ஆகியோா் கலப்பு திருமணம் செய்தனா். இதனால், அந்த கிராமத்தினா் மூவரின் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில் திண்டுக்கல் கிழக்கு வட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் அந்த கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனா். இதில், அந்த குடும்பத்தினரிடம் கோயில் வரி மட்டுமே வசூலிப்பதில்லை என்றும், யாரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கவில்லை என்றும் தெரிவித்தனா். இதையடுத்து, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story