மாலை வாங்க சென்றவர் விபத்தில் மரணம்

மாலை வாங்க சென்றவர் விபத்தில் மரணம்
உயிரிழப்பு 
தஞ்சாவூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு மாலை வாங்க சென்ற பி.இ பட்டதாரி கார் மோதி பரிதாபமாகப் பலியானார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்க நாடு மேலையூர் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் ராஜமுரளி. பிஇ பட்டதாரியான இவர் இன்னும் ஒரு சில மாதங்களில் வெளி நாட்டிற்கு வேலைக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் இவர் முருகானந்தம் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஒரத்தநாட்டிற்கு மாலை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் மன்னார்குடி- ஒரத்தநாடு நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது வன்னிப்பட்டு ஆர்ச் அருகே உள்ள வளைவில் எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக ராஜமுரளியின் பைக்கின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜமுரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஒரத்தநாடு காவல்துறையினர் விரைந்து சென்று ராஜமுரளி உடலை கைப்பற்றி கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துக்க நிகழ்ச்சிக்கு மாலை வாங்க சென்ற இளைஞர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story