கற்பூரத்தை சாப்பிட்டவர் பலி

கற்பூரத்தை  சாப்பிட்டவர் பலி

கற்பூரத்தை சாப்பிட்டவர் பலி

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் கற்பூரத்தை அதிக அளவு சாப்பிட்டுள்ளத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஏனா தவாடி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் பெருமாள் (60). இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி இரவு வீட்டில் இருந்த பெருமாள், திடீரென கற்பூரத்தை அதிகளவு எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் விக்னேஷ்(30) மோரணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags

Next Story