கிருஷ்ணகிரி பொறுப்பாளர் தலைமையில் முதல்வரை சந்தித்த நிர்வாகிகள்

கிருஷ்ணகிரி பொறுப்பாளர் தலைமையில்   முதல்வரை சந்தித்த நிர்வாகிகள்

முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள்

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளரும், திமுக தீர்மான குழு துணைத் தலைவருமான பார்.இளங்கோவன் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாட்டில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிந்து கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு உணவு அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட. பொறுப்பு அமைச்சருமான அர.சக்ரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் MLA, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் MLA, ஓசூர் மேயர் சத்யா, கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேப்பனபள்ளி முருகன், மாநில விவசாய அணி டேம் வெங்கடேசன் ,

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய நிர்வாக குழு உறுப்பினர் வே.பிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.இந்நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளரும், திமுக தீர்மான குழு துணைத் தலைவருமான பார்.இளங்கோவன் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story