விபத்தில் சுகாதார நிலைய ஊழியர் பலி - லாரி டிரைவர் கைது

விபத்தில் சுகாதார நிலைய ஊழியர் பலி - லாரி டிரைவர் கைது

பைல் படம் 

நாகர்கோவில் அருகே வாகன விபத்தில் சுகாதார நிலைய ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாதன் ஜெயக்குமார் (48). இவர் நாகர்கோவில் வடசேரி சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ திட்ட வாகனத்தில் தற்காலிக டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். நாகர்கோவில் புத்தேரி நான்கு வழிச்சாலை அருகே வரும்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி பைக்கில் மோதியதில் நாதன் ஜெயக்குமார் பைக் உடன் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அந்த பைக்கில் பின்னால் இருந்த இவர் லிங்கேஷ் என்பவரின் ஐந்து வயது மகன் ஸ்ரீ சரண் உயிர் பிழைத்தார். நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, டாரஸ் லாரி டிரைவர் அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த செல்வ பீட்டர் (28) என்பவரை கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து செய்த விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story