கடற்கரைக் கோயில் வளாகத்தில் ‘உடல் நல சாம்பியன்’ கௌரவ நிகழ்ச்சி

கடற்கரைக் கோயில் வளாகத்தில் ‘உடல் நல சாம்பியன்’ கௌரவ நிகழ்ச்சி
உடல் நல சாம்பியன் கௌரவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் வளாகத்தில் ‘உடல் நல சாம்பியன்’ கௌரவ நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் அபிராமி யோகாலயம் சாா்பில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கடற்கரைக் கோயில் வளாகத்தில் ‘உடல் நல சாம்பியன்’ கௌரவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 53 பெண்களும், 10 குழந்தைகளும் பங்கேற்றனா்.

முன்னதாக 31 நாள்கள் ஆரோக்கிய சவால் திட்டம் என்ற பெயரில், மகளிா் யோகா குழுவினா் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story