திண்டுக்கல் அருகே கழிவு நீர் வெளியேறி வருவதால் சுகாதாரக் கேடு

திண்டுக்கல் அருகே கழிவு நீர் வெளியேறி வருவதால் சுகாதாரக் கேடு

சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர்

திண்டுக்கல் அருகே கழிவு நீர் வெளியேறி வருவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டை கிராமம் பில்லம நாயக்கன்பட்டி பெருமாள் கோயில் தெற்கு தெரு வீட்டு குழாய் இணைப்பில் கழிவுநீர் உள்ளே செல்கிறது. இதன் காரணம் குழாய் வாழ்வு கழிவுநீர் செல்லும் பாதையில் வாழ்வு அமைந்துள்ளதால் கழிவுநீர் உள்ளே செல்கிறது.

இதனால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. பல்வேறு விதமான சுகாதார கேடுகள் விளைவிக்கும் என்ற அச்சம் உள்ளது.. குழாய் இணைப்பு முறைகேடு தொடர்பாக பல்வேறு முறை தலைவர் சுப்பிரமணி என்பவரிடம் முறையீடு செய்தும்...அவர் அதனை மெத்தன மாக எடுத்துள்ளார். அதிகார போதையில் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்.

அவர் தான் அந்த பகுதியில் குழாய் இணைப்பு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் அவர் அதனை கண்டு கொள்ளாமல் உள்ளார்.... மக்களை நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து காப்பாற்றவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story