அகற்றப்படாத பட்டாசு குப்பைகளால் சுகாதார சீர்கேடு

அகற்றப்படாத பட்டாசு குப்பைகளால் சுகாதார சீர்கேடு
அகற்றப்படாத குப்பைகள் 
புதுக்கோட்டை 27 வது வார்டுக்கு உட்பட்ட கீழ மூன்றாம் வீதியில் தீபாவளி பண்டிகை முடிந்து மூன்று நாட்கள் ஆகியும் அங்கு குப்பைகள் அகற்றப்படவில்லை இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர் மேலும் புதுக்கோட்டை நகர் முழுவதும் ஆங்காங்கே இதுபோல் குப்பைகள் அகற்றப்படவில்லை இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மேலும் தற்போது மழைக்காலம் துவங்கி விட்டதால் குப்பைகளில் மழைநீர் தேங்கி சகதியாக மாறுவதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு,சிக்கன் குனியா நோய் வேகமாக பரவி வரும் நேரத்தில் இந்த குப்பைகள் அகற்றப்படாததால் மேலும் நோய்கள் பரவும் என்ற அச்சம் எழுந்துள்ளது

Tags

Next Story