புத்தாண்டு கொண்டாடிய சுகாதார தொழிலாளர்கள்

புத்தாண்டு கொண்டாடிய சுகாதார தொழிலாளர்கள்
புத்தாண்டு கொண்டாட்டம் 
அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
புத்தாண்டு பண்டிக்கை நேற்று அனைவராலும் கொண்டாடபட்டது. இதனையொட்டி அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்கள் இன்று AITUC தொழிற்சங்க அலுவலகத்தில் ஒன்றுகூடி புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் தெரிவித்து கொண்டனர். பின்னர் AITUC சுகாதார தொழிற்சங்க மாநில செயலாளர் தண்டபாணி, சுகாதார தொழிலாளர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதில் அச்சங்க செயலாளர் நல்லுசாமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story