வெப்ப அலை அபாயம் : ஆட்சியர் அறிவுறுத்தல்

வெப்ப அலை அபாயம் : ஆட்சியர் அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியர் கற்பகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 24ஆம் தேதி ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story