பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு

பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அருவியில் குளிக்க சென்ற சுற்றுலா தவிப்பு
அருவியில் ஏற்பட்ட திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்தனர்.

தென்காசி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அலறடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.

இதில் நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் என்ற சுற்றுலா பயணி வெள்ளத்தில் சிக்கி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் யாரேனும் சிக்கி உள்ளதாகவும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சம்பவம் நடைபெற்ற பழைய குற்றாலம் அருவியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரடி ஆய்வு பணியில் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களுக்கு உதவியாக உள்ளூர் வாசிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story