கொண்டலாப்பட்டி அருகே விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலி

கொண்டலாப்பட்டி அருகே விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலி
X

கோப்பு படம் 

கொண்டலாப்பட்டி அருகே விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலியானர்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஏர்வாடி நரிக்கல் காட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 31-ந் தேதி இரவு புத்தூர் அக்ரஹாரம் வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சைக்கிள் மீது ேமாட்டார் சைக்கிள் மோதியது.

இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனன்றி மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உ

யிரிழந்த மணிகண்டனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story