கனமழை :100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

கனமழை :100 ஏக்கர் நெற்பயிர்கள்  பாதிப்பு

பனையூரில் கனமழை காரணமாக 100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனியடைந்துள்ளனர்.

பனையூரில் கனமழை காரணமாக 100 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வேதனியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே பனையூர் கிராமத்தில் ஒரு பகுதி குடியிருப்பு பகுதியாகவும், மற்றொரு பகுதி விவசாய பகுதியாகவும் இருந்து வருகின்றது. இங்கு 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் கடந்த இரண்டு நாள் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் தண்ணீரில் மூழ்கி வயல்வெளிகள் தேங்கி உள்ள தண்ணீர் வடிக்க முடியாத சூழ்நிலையில் நெற்கதிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு இருபதாயிரம் வரையில் செலவிடப்பட்டுள்ளதால் 100 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டதில் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

Tags

Next Story