கொட்டித் தீர்த்த கனமழை; ரோட்டில் தேங்கிய மழைநீர்

கொட்டித் தீர்த்த கனமழை; ரோட்டில் தேங்கிய மழைநீர்

மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தநிலையில், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளானர்.  

மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தநிலையில், சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளானர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டடாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வபோது மழை பெய்து வரும் நிலையில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மேகங்கள் புடைசூழ இருண்டு காணப்பட்டதுடன் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழையாக வெளுத்து வாங்கத் தொடங்கியது.

இரவு வரை நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தனிந்து பொதமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம் சாலையில் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.அப்போது மழை நீரில் ஒரு கார் சிக்கிக் கொண்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அந்த காரை மீட்டனர். இதனால் வாகனங்கள் மண்ணச்சநல்லூர் கடைவீதி வழியாக செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.

Tags

Next Story